Welcome to ECC

News & Event

News and Events

World Cancer Day – 2018 (Erode)

“உலக புற்றுநோய் தினம்”
விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி – 2018

1.Cancer Awareness program at Siddhartha Matriculation School, Thirunagar Colony, Erode

2.Cancer Awareness program at Vellalar Engineering College, Erode

 

உலகப் புற்று நோய் தினம்! – பிப் 4-2018

செல்வா சேரிடபிள் ட்ரஸ்ட், ஈரோடு.

                ஈரோடு கேன்சர் சென்டர், ஈரோடு. இணைத்து நடத்திய, உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடத்தி ஈரோடு மக்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2010 இருந்து 8 வருடங்களாக செல்வா சாரிடப்பில் ட்ரஸ்ட் உள்ளூர் சமூக அமைப்பு களுடன் இணைத்து நடத்திக்கொண்டு வருகின்ரோம்

               இந்த வருடம் பேரணி,.Dr.சுதாகர்.இயக்குனர் சுதா மருத்துவமனை, ஈரோடு, Dr.க.வேலவன் MDRT இயக்குனர் ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் ஈரோடு இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் முன்னிலை வகிக்க ஜான்சன் MRI இருந்தது Dr.கனகாசலகுமார் இணை இயக்குநர் நலபணிகள் ஈரோடு அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைக்க கிளப் மேலன்ச்சி வரை நடைபெற்றது. புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு சரியாக 11.00 மணிக்கு கிளப் மிலான்ச்சில் தொடங்கப்பட்டு 1.00 மணி வரை நடைபெற்றது.

கருத்தரங்கு வரவேற்புரை:திரு. ஜே.ஜே.பாரதி, நிறுவனர் செல்வா சேரட்டீபில் ட்ரஸ்ட் வழங்க

வாழ்த்துரை டாக்டர். க.சுதாகர் தலைவர், ஈரோடை மற்றும் சுதா பல துறை மருத்துவமனை, ஈரோடு வழங்கினார்.

புற்றுநோய் விழிப்புணர்வு படக்காட்சி.

               Dr.K.வேலவன் MDRT புற்றுநோய் சிறப்பு கதிர்வீச்சு நிபுணர், ஈரோடு கேன்சர் சென்டர், வழங்கி மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க சிறப்பாக நடை பெற்றது.

சிறப்புரை.வடுகம்.R.சிவகுமார் காவல்துறை கண்காணிப்பாளர், ஈரோடு அவர்கள் புற்றுநோய் வராமல் தடுக்க எந்தவித பொருட்கள் பயன்படுத் வேண்டு எதை தவிர்க்கவேண்டும் என படவிலகத்துடன் விளக்கினார்.

நன்றியுரை:திரு.சா.ரொசாரியோ, செல்வா சாரிடப்பில் ட்ரஸ்ட், ஈரோடு வழங்க விழா இனிது நிறைவடைய்ந்தது. விழாவில் ஈரோடு கேன்சர் சென்டர் செவிலியர்,நந்தா செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் மற்றும் செல்வா சாரிடப்பில் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வில் விவாதிக்கப்பட் முக்கிய குறிப்புகள் உங்கள் பார்வைக்கு,

இன்று உலகில் அனைத்து நாடுகளையும் புற்றுநோய் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

2012 இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் *1 கோடியே 41 லட்சம் பேர்* புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • *82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர் 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
  • இதனால் *உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 04 ஆம் நாள்* அனுசரிக்கப்படுகின்றது.
  • புற்று நோய் விழிப்புணர்வு நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் எதிர்பார்ப்பாகும்.*
  • இத்தினத்தை *உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு (Union for International Cancer Control, UIIC)* உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துணையுடன் முன்னின்று நடத்துகிறது.
  • இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது.
  • கட்டுப்பாடற்று செல்கள் பல்கி பெருகுவதே புற்று நோய் புற்றுநோய் என்பது (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.* இந்தக் கலங்கள் பிரிந்து பரவி ஏனெய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும், எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
  • மரபிகளில் ஏற்படும் மாற்றங்கள் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை சுருக்கமாக நோக்குவோமாயின் கலங்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று, சில வேளைகளில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

அறிகுறிகள்

புற்று நோய் தொடர்பான அறிகுறிகளில் சில- உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு, நோயின் தன்மைக்கேற்ப அறிகுறிகள் மாற்றமடையலாம்.

மரணத்தைத் தள்ளிப் போடலாம்

புற்றுநோய் தவிர்க்கப்பட முடியாத போதிலும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும். ஆகையினால், புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனிமேல் தன்னால் எதுவுமே செய்ய இயலாது என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

விழிப்புணர்வு அவசியம்

சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோய்களிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவேயுள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கத்தை, போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்களின் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து விடமுடியும்.

அதிகரிக்கும் நோயாளிகள்

                 ஈரோடு மற்றும் தமிழ்நாட்டில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன்படி வருத்திற்கு புற்றுநோய் சிகிச்சைகளுக்காக 50 ஆயிரம் பேர் புதிதாக தம்மை பதிவு செய்து கொள்வதாக சுகாதார  பணியகம் தெரிவித்தது. இவர்களுள் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழந்ததாகவும் பணியகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக் கட்டத்தில் சிகிச்சைக்காக வைத்தியர்களை நாடி வருவதே மருத்துவ மனைகல் தெரிவிக்கும் கிடைக்கும் பொதுவான முறைப்பாடு எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு, மாநிலதில் 20 வது இடத்தில் புற்றுநோய் பாதிப்பில் உள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் முதலிடத்தில் உள்ளது.

இதில் ஈரோடு கேன்சர் செண்டர் பங்கு அளப்பரியது கடந்த 7 வருடத்தில் சுமார் 7000 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நவீன சிகிச்சை முறைகள்

தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் ஈரோடு கேன்சர் சென்டறில் ஈரோட்டில் முதன் முறையாக சுமார் 15 கோடி செலவில் Linac with IMRT and Bracy Therapy கருவிகள் நிறுவப்பட்டு புற்றுநோய் கட்டிகள் மட்டும் கணக்கிட்டு கதிர்வீச்சு கொடுக்கப்பட்டு நல்ல செல்கள் பாதுகாக்க முடிகின்றது.  நோயாளிகளை முன்னரை விடவும் அதிகமாகவே குணப்படுத்த முடியுமெனவும் டாக்டர்.K.வேலவன் மற்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறலாம் சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமயிர் கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையேயாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகையினால் சமூகத்திற்கு வெட்கப்பட அல்லது அஞ்சியோ சிகிச்சைகள் ஆரம்பிப்பதனை காலம் தாழ்த்தவோ அல்லது தவிர்ப்பதோ பிழையான கொள்கையெனவும் புற்றுநோய் குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற Dr.K.வேலவன் புற்றுநோய் கதிர்வீச்சு நிபுணர் வலியுறுத்தினார்.

முழுமையான உடற்பரிசோதனை:*35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் சுய மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கட்டிகள் அல்லது காம்புகலில் வெடிப்பு பால், இரத்தம் வடிதல் இருந்தால் மருத்துவரய் அணுகவேண்டும் மற்றும் மமோகிராம்,கருப்பை வாய் பேப் பரிசோதனை, முழுமையான உடல் மருத்துவ பரிசோதனைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியம்.

ஆரோக்கியமாக வாழ பழகுவோம் எனவே இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எந்தவித அச்சமுமின்றி இன்றே அருகில் உள்ள மருத்துவரை நாடுவோம்.

நமது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதை வாழ்நாள் பழக்கமாக கொள்வோம்.

அன்புடன்…

சா.ரொசாரியோ

(ஈரோடு கேன்சர் சென்டர்)

9865248884.